News September 3, 2025

பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

பெரம்பலூர் மக்களே! சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 15, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு பேரணி

image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழாவை, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, நேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி, பெரம்பலூர் பாலக்கரை அருகில், ஆட்சியர் மிருனாளினி கொடியசைத்து தொடங்க்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 14, 2025

பெரம்பலூரில் TVK சார்பில் போராட்டம்!!!

image

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் உத்தரவுபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பல்வேறு குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் (நவ-16) அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம், இன்று (நவ-14) மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் ஒன்றாக மனு அளித்தனர்.

News November 14, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!