News November 26, 2025
பெரம்பலூர்: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி

சேலத்தை சேர்ந்தவர் கருப்பையா சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இவரும், இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த காளிமுத்துவும் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார், கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News January 25, 2026
பெரம்பலூர்: நாளை கிராம சபைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர கோரிக்கைகள் குறித்து விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News January 25, 2026
பெரம்பலூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (42). இவர் மீது பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து, மகிளா நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து பாடாலூர் போலீசார் சுதாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


