News October 19, 2025

பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வருகிற அக்.24ம் ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன விற்பானி அலுவலகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர்: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News December 12, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

பெரம்பலூர்: பொதுமக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. மேலும் ​குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் மற்றும் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகளுக்கு உடனடித் தீர்வுகாண, க.எறையூர், அன்னமங்கலம், பெரியம்மாபாளையம், அயினாபுரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!