News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
பெரம்பலூர்: மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி

கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (55). இவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக சிறுகுடலைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டவர்கள் மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
பெரம்பலூர்: பகுதிநேர ஆசிரியர் தற்கொலை

சென்னையில் கடந்த 13-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பகுதிநேர ஆசிரியர்களில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணனும் (50) ஒருவர். மன உளைச்சலில் இருந்த கண்ணன் போராட்டதின்போதே திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக பகுதிநேர ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் கடந்த 14-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
News January 16, 2026
பெரம்பலூர்: சனி தோஷம் நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.


