News August 5, 2024
பெரம்பலூரில் “மக்களைத்தேடி மருத்துவம்” 4-ஆண்டு துவக்கவிழா

பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் 4-ஆம் ஆண்டு துவக்கவிழா இன்று (05.08.2024) பெரம்பலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 18, 2026
பெரம்பலூர்: குறள் சார்ந்த போட்டிகள் அறிவித்த ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளும் வகையில், குறள் சார்ந்த ஓவிய போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நாளை (ஜன.19) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கலந்து கொள்வார் ஆதார், குடும்ப அட்டையுடன் 1 மணி நேரத்திற்கு முன்பாக வரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
பெரம்பலூர்: ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பெரம்பலூர் விசிக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவரும், சிதம்பரம் MP திருமாவளவனை தனியார் தொலைகாட்சியில், திமுக கழகத் துணைப் பொதுச்செயலாளர் ராசா அவதூராக பேசியதை கண்டித்து, பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இன்று (ஜன.18) அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
News January 18, 2026
பெரம்பலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <


