News December 16, 2025
பெரம்பலுர் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சமத்துவபுரம், வடக்கு மாதவி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.
Similar News
News January 25, 2026
பெரம்பலூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (42). இவர் மீது பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து, மகிளா நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து பாடாலூர் போலீசார் சுதாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News January 25, 2026
பெரம்பலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!
News January 25, 2026
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் , ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 11 மணியளவில் கிராம ஊராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் கிராம சபை கூட்டமானது தொடங்கி நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


