News October 9, 2024
பூப்பறிக்கும் தகராறில் ஒருவருக்கு வெட்டு!

ஒழலூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (45), அதேப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஏரியில் பணம் கொடுத்து தாமரை பூ பறித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், விமல் ராஜ் (28), குகன் (35), சுதாகர் (42) ஆகியோர் ஏரியில் பூ பறித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகராறில் அண்ணாதுரை கையில் வெட்டிவிட்டு விமல்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
செங்கல்பட்டு மக்களே இந்த WEEKEND பிளான் ரெடி

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலத்தின் கலை பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 7, 2025
செங்கல்பட்டு: முதியவரிடம் கோடி கணக்கில் மோசடி 3 பேர் கைது

தாம்பரத்தைச் சேர்ந்த 62 வயது சந்திரன் என்பவரிடம், ‘வங்கி கணக்கு மோசடி, டெல்லி போலீஸ் வழக்கு, டிஜிட்டல் கைது’ எனக் கூறி மிரட்டி ரூ.2.25 கோடியை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இது தொடர்பாக, ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மேலும் 3 பேர் (அக்ஷய் சுந்தர் ராவ், நஜ்ருல் அலி, மொபரோக் ஹூசைன்) கைது செய்யப்பட்டனர். சந்திரனிடம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.
News December 7, 2025
செங்கல்பட்டு: இன்றைய ரோந்துக் காவல் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


