News January 24, 2026
பூத் நிலை அலுவலர்களுக்கு ECI எச்சரிக்கை

SIR பணிகளில், வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR பணிகளில் தவறு நடந்தால் பூத் நிலை அலுவலர்களை (BLO) இடைநீக்கம் செய்வதோடு துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றச்செயல் தொடர்பான வழக்குகளில் FIR பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
தேர்தல் 2026.. விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வு

புதுச்சேரிக்கு புதிய நிர்வாகக் குழுவை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார். தனது வழிகாட்டுதலின்படி Ex MLA-க்கள் சாமிநாதன், அசனா, பெரியசாமி அடங்கிய 30 பேர் கொண்ட குழு புதுச்சேரியில் தவெகவின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் என விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ள நிலையில், இந்த 30 பேர் தான் TVK வேட்பாளர்களோ என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
News February 16, 2026
ஆணுறுப்பை விற்பனை செய்த இளைஞர்.. எதற்கு தெரியுமா?

தலைப்பை பார்த்ததும் விசித்திரமாக தோன்றுகிறதல்லவா? தாய்லாந்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. தனது விலை உயர்ந்த காரில் மாற்றம் செய்வதற்காக, இளைஞர் ஒருவர் தனது விதைப்பையை (ஆணுறுப்பின் கீழ் பகுதி) ₹24.5 கோடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்ன இருந்தாலும், இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்!
News February 16, 2026
BREAKING: தேர்தல்.. அறிவித்தார் பிரேமலதா

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.22 வரை நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை, தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால், <<19154188>>NDA-வில்<<>> அவர் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


