News August 19, 2024
புளியங்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

தென்காசி புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இசக்கித்துரை மனைவி பாப்பம்மாள்(55). இவர் இன்று(ஆக.,19) காலை குடிதண்ணீர் பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சசை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பாப்பம்மாள் உடல் உடற்கூறு ஆய்விற்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
தென்காசி: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

தென்காசி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
தென்காசி மக்களுக்கு HAPPY நியூஸ்..!

தாம்பரம் – செங்கோட்டை இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை 24 சனிக் கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும் 26 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் செல்லும்செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 24, 2026
அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


