News November 3, 2025

புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், நவ.9 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!

Similar News

News November 7, 2025

நவம்பர் 7: வரலாற்றில் இன்று

image

*1858-கல்வியாளர் பிபின் சந்திர பால் பிறந்தநாள். *1867–நோபல் பரிசு வென்ற மேரி கியூரின் பிறந்தநாள். *1888–நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் பிறந்தநாள். *1969–நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள். *1975–இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள். *1993 – திருமுருக கிருபானந்த வாரியார் மறைந்த நாள். *2000 – அரசியல்வாதி சி.சுப்பிரமணியம் மறைந்த நாள்.

News November 7, 2025

சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

image

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மொத்தம் 465 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க நாளை விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு என அழைத்து செல்லப்பட்டு, சைபர் மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,500 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 7, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

error: Content is protected !!