News November 25, 2025
புதுவை: வெளிநாட்டு மாணவரை தேடி பிடித்த போலீசார்

ருவாண்ட நாட்டை சேர்ந்த சேமா மன்சி பபரீஷ்(35) என்பவர் சிதம்பரம் அண்ணாமலை ப.கழகத்தில் பட்டம் படித்த பின், புதுவை ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார். இவரது விசா காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்த நிலையில், விசா புதுப்பிக்கப்படவில்லை. புதுவையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர்கள் இவரை தேடிய நிலையில், முதலியார்பேட்டை தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்து அவரை நேற்று போலீசார் பிடித்தனர்.
Similar News
News January 13, 2026
புதுவை: உங்கள் தொகுதி MLA நம்பர் இருக்கா?

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்: 1.உப்பளம், அனிபால் கென்னடி – 9488483330, 2.அரியாங்குப்பம், பாஸ்கர் – 9443468258, 3.காமராஜ் நகர், ஜான் குமார் – 9655680961, 4.காரைக்கால் தெற்கு, நாஜிம் – 9585400500, 5.காரைக்கால் வடக்கு, திருமுருகன் – 9344488811, 6.நெடுங்காடு, சந்திர பிரியங்கா – 9443629191. இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்!
News January 13, 2026
புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
புதுச்சேரி: 2000ஆம் ஆண்டு பழமையான கோயில்!

காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்.!


