News November 10, 2025
புதுவை: போலீஸ்காரர் மோட்டார் சைக்கிள் திருட்டு

அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர்(30). இவர் புதுவை காவல்துறையில் போலீஸ்காரராக பணி புரிகிறார். சம்பவத்தன்று அவர் உறவினர் சுரேந்தர், திவாகரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு கடற்கரையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
புதுவை: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


