News October 19, 2025
புதுவை: ஜிப்மரில் மாணவர் சேர்க்கை!

புதுவை, ஜிப்மரில் பி.எஸ்சி நர்சிங், ஹெல்த் சயின்ஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்காக கடந்த செ.22 வரை விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், தேர்வான மாணவர்கள் தர வரிசை பட்டியலில் 3037 பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் கலந்தாய்வு வரும் வருகிற அக்.28ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு பின் மாணவர்கள் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
Similar News
News December 14, 2025
புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 14, 2025
புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கலைஞருக்கு உற்சாக வரவேற்பு

கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருது, இந்த ஆண்டு புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் பாரம்பரிய கைவினை கலைஞர் மோகன்தாசுக்கு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். தேசிய விருது பெற்ற புதுவை திரும்பிய மோகன்தாசுக்கு, உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


