News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News January 25, 2026
JUST NOW: புதுச்சேரியை சேர்ந்தவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், 2026-ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய தற்காப்புக் கலை ஜாம்பவான் பூரணங்குப்பம் பழனிவேலுக்கு, கலைத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்படுவதாக, மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
News January 25, 2026
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News January 25, 2026
புதுச்சேரி: ஆன்லைன் மோசடி – மார்பிங் செய்து மிரட்டல்

வில்லியனூரைச் சேர்ந்த ஒருவர் கடன் செயலியில் ரூ.4.61 லட்சம் பெற்று, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளார். அதன் பிறகும், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


