News November 19, 2025

புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

image

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Similar News

News January 21, 2026

புதுவை: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

image

புதுவை மாநிலம் வில்லியனுரில் திருக்காமீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான திருக்காமீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

News January 21, 2026

புதுவை: போக்ஸோ வழக்கில் வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

image

புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆடியபாதம் (39). இவர் 2013-ம் ஆண்டு போக்ஸோ (POCSO) வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து, தற்போது தலைமறைவாக உள்ளார். ​அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வீட்டில் இல்லாததால், வரும் 23-ம் தேதி காலை 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!