News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News January 17, 2026
புதுச்சேரி: திருமண தடை நீங்க! இங்க போங்க

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
புதுவை: அதிக மது குடித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

புதுவை மாநிலம் கோட்டுச்சேரி சுனாமி நகர் செல்வகுமார்(56) மாற்றுதிறனாளி மனைவி சின்னபொண்ணு. இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். செல்வகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்தவர், மண்டபத்தூர் சாராயக்கடை அருகே இறந்து கிடந்துள்ளார். கோட்டுச்சேரி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
புதுவை: பெண்ணிடம் ரூ.17.30 லட்சம் ஏமாற்றிய இளைஞா் கைது

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த எழிலரசி (50). திருமண அழைப்பிதழ் அச்சிடச் சென்ற போது ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, அச்சக உரிமையாளர் ரமேஷ் (38) ரூ.17.30 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை காவல் நிலையம் போலீஸார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


