News November 19, 2025

புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

image

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Similar News

News January 20, 2026

புதுவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

புதுவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 20, 2026

புதுவை: நகை தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

image

புதுவை, சாரம் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி சுந்தரமூர்த்தி (63). இவர் நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்றபோது திடீரென தவறி விழுந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 20, 2026

புதுவை: சீனியர் எஸ்.பி-க்களுக்கு பறந்த உத்தரவு

image

சீனியர் எஸ்.பி லட்சுமி சவுஜன்யா, நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் 16 சீனியர் எஸ்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுவையில் உள்ள மொத்த காவல் நிலையங்களிலும் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.‌ மேலும் இந்த ஆய்வறிக்கையை 6 பிரதிகளாக தயார் செய்ய வேண்டும். பிப்.15-க்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று காவல்துறை தலைமையக சீனியர் எஸ்.பி அனில்குமார் லால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!