News October 17, 2025
புதுவை: ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் காவல்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டா் சுற்றளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பல கடைகளில் நேற்று சோதனை செய்யப்பட்டன. அப்போது ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைக்காரர்களுக்கு சில அறிவுரைகளையும் அவர்கள் வழங்கினர்.
Similar News
News December 9, 2025
புதுவை: விஜய் பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்

புதுச்சேரியில், இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் பேசியத்தற்கு, அமைச்சர் நமச்சிவாயம் எதிர்வினை ஆற்றியுள்ளார், ரேசன் கடைகள் மத்திய அரசு Controlல் இருக்கிறதா?, இல்லை மாநில அரசு Controlல் இருக்கிறதா?, இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் ரேசன் கடைகள் மூலம் தான் விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத்தெரியாம பேசிட்டு இருக்கார் விஜய் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியுள்ளார்.
News December 9, 2025
காரைக்கால் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
News December 9, 2025
BREAKING: புதுச்சேரி அரசை பாராட்டிய விஜய்

புதுச்சேரியில், இன்று தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டம், புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், புதுச்சேரி பாராபட்ச்சமின்றி நடந்துகொள்ளும் புதுவை அரசுக்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரி அரசு, திமுக அரசு மாறி கிடையாது, மக்களுக்கு பாதுகாப்பு உள்ள அரசு என்று விஜய் திமுகவை சாடி பேசியுள்ளார்.


