News September 29, 2025
புதுச்சேரி: விவசாயிகளுக்கு ரூ.1.15 கோடி மானியம்

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பயிர் உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக, புதுச்சேரியைச் சேர்ந்த 1891 விவசாயிகளுக்கு 1.15 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. அட்டவணை இன விவசாயிகள் 75 பேருக்கு ரூ.3,55,000 மானியம், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
புதுவை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுவை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
புதுவை: 17 போலீஸ்சார் இடமாற்றம்

புதுச்சேரி காவல்துறை தலைமையக எஸ்.பி. மோகன்குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் காவல் துறையில் 3 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 17 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சப் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து சிக்மா செக்யூரிட்டி பிரிவுக்கும், சிவசுப்ரமணியன் வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் இருந்து வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்
News November 8, 2025
வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று “தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை” என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் தென்னையில் நாற்று உற்பத்தி, உரமேலாண்மை, நீர் நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற பயிற்சியானது காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.


