News June 17, 2024
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரெஸ்டோ பார்கள் தொடர்பாக கூட்டணியல் உள்ள பாஜக அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் முதல்வருடம் மனு தரவில்லை. முதல்வருக்கும், அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதா? இனியாவது முதல்வர் பள்ளி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை மூடுவாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News January 18, 2026
புதுச்சேரி: பாரில் மயங்கி விழுந்து பலி

கடலூர், கோண்டூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் கணேஷ்பாபு(54). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சம்பவத்தன்று, முள்ளோடையிலுள்ள பாரில் மது குடிக்க வந்துள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 18, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
News January 18, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


