News April 30, 2024
புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி கடற்பகுதியில் நெகிழி போத்தல்கள் மற்றும் மணல் மூட்டை கட்டி அதில் சவுக்கை போன்ற மரங்களின் கிளைகளை கொண்டு கடல் பகுதியில் இறக்கிவிட்டு அதன் மீது ஹூக்கான் (எ) அக்டி முறையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையில் மீன்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அரசின் மீன்வளத்துறை சார்பில் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News December 11, 2025
புதுவை அரசு விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவானது மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலமாக, பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம் செயல்படுத்தி வருகின்றது. புதுச்சேரி மாநில தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு இந்த ஆண்டிற்கான பேட்டரி விசையின் மூலம் இயங்கும் விசைதெளிப்பான் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News December 11, 2025
காரைக்கால் சிறப்பு மருத்துவம் அறிவிப்பு

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (13.12.2025) அன்று வருகை தந்து காலை 10 மணி முதல் 12 மணி வரை மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் தர உள்ளார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
News December 11, 2025
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!


