News October 13, 2025
புதுச்சேரி: மனநல காப்பகத்தில் பெண் இறப்பு!

அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் சாலையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற 35 வயது பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தங்கியிருந்த, அப்பெண்ணுக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காப்பக நிர்வாகத்தினர், அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
Similar News
News December 6, 2025
புதுச்சேரி: தவெக பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு அனுமதி

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
News December 6, 2025
புதுச்சேரி: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

புதுச்சேரி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். <
News December 6, 2025
புதுவை: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

திரு-பட்டினம் சதீஷ்குமார் என்ற மாதவராஜ். இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில், சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


