News November 29, 2024

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை யொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 7, 2025

புதுவை: நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்

image

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட மோர்சார் தெரு, குட்டவாப்பு தெரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

புதுச்சேரி: வனக்காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பு

image

புதுச்சேரி அரசின் தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுவை அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் சவுகான் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

error: Content is protected !!