News November 28, 2024

புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்

image

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது இதனை எடுத்து புயல் சின்னம் உருவானது இந்த நிலையில் புதுச்சேரியில் கன மழை பெய்து வந்தது இந்தப் புயல் மாமல்லபுரம் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரிக்கு நாளை வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது

Similar News

News November 10, 2025

புதுச்சேரி 3ஆம் இடம், எதில் தெரியுமா?

image

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைத்தொடர்பு மனநல திட்டம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 10, 2025

புதுவை: மனைவி கண்டிப்பு-கணவர் தற்கொலை!

image

முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் பெயிண்டர் மாதவன். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி தட்டி கேட்ட நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மாதவன், அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2025

புதுவை: புகைப்படம் அனுப்பினால் ரூ.2000 பரிசு!

image

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் உள்ள அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள்,கழிவுகள் கொட்டப்பட்டு அந்த இடம் மலை போல குப்பைகள் குவிந்து அசுத்தமாய் காட்சியளிக்கிறது. இதுகுறித்து குப்பைகளை கொட்டும் வாகனங்களின் விபரங்களை புகைப்படம் எடுத்து 75981-71674 என்ற எண்ணுக்கு அனுப்பி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2,000 சன்மானம் வழங்கப்படும் என உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!