News October 13, 2025
புதுக்கோட்டை: விபத்தில் தந்தை, மகன் பரிதாப பலி

தஞ்சாவூர், பேராவூரணி தாலுகா திருவதேவன் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் பைக்கில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் சேதுபவாசத்திரம் முதல் கட்டுமாவடி ECR சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவரது ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மகன், காளிதாஸ் மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
Similar News
News December 12, 2025
புதுக்கோட்டை: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News December 12, 2025
புதுக்கோட்டை: ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வருகிற டிச.13ஆம் தேதி ரேசன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், செல்போன் எண் மாற்றுதல், புதிய அட்டை பதிவு செய்தல் போன்றவற்றை சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


