News October 15, 2024
புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலில் அதிக காற்று வீசுவதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Similar News
News July 9, 2025
புதுக்கோட்டை: ரேஷன் குறைதீர்க்கும் முகாம்

புதுகை மாவட்டம் முழுவதும் ஜூலை12ஆம் தேதி அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News July 9, 2025
புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003132>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.
News July 9, 2025
புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.