News October 8, 2024
புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. புத்தக ஆர்வலர்கள் தங்களது விவரங்களை மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக ஆணைக்குழு, மேல 4-ம் வீதி, புதுக்கோட்டை என்ற முகவரியில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
புதுக்கோட்டை: முதியவர் மீது கார் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சக்குடியை சேர்ந்தவர் காத்தமுத்து (75). இவர் நேற்று கீழமஞ்சக்குடி கிளை சாலையை கடக்க முயன்ற போது, காரில் வந்த ரஞ்சித் குமார் (27) மோதியதில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
புதுகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 11, 2025
புதுகை மாவட்டத்தில் ஓர் புதிய அறிமுகம்!

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கில் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி பெற E-KYC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பதை APT 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீடு மூலம் பெறலாம். காகிதமற்ற பண பரிவர்த்தனைகளை இதன் மூலம் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, புதுகை மாவட்ட அஞ்சலக கூட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


