News October 11, 2025
புதுக்கோட்டையில் போட்டித் தேர்வு- கலெக்டர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடைபெற உள்ளது. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 10 தேர்வு மையம், புதுகை கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6631 தேர்வு எழுத உள்ளனர் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை, பொன்னகுளம், மேலத்தானியம், நகரபட்டி, கொன்னையூர், குளத்தூர், பாக்குடி, இலுப்பூர் மற்றும் மாத்தூர் துணைமின் நிலையங்களில் நாளை ( டிச. 9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க
News December 8, 2025
புதுகை: கார் மோதி பரிதாப பலி!

வாடியான்களத்தை சேர்ந்தவர் அழகர் (86). இவர் நேற்று முன்தினம் சைக்கிலில் விராலிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அழகர் ஓட்டிசென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு அழகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
News December 8, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


