News October 20, 2025
புதுகை: வெளுத்து வாங்க போகும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை, நாகை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
புதுக்கோட்டை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற டிச.13ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இம்முகாமில், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் அரசு & அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு பயிலும் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய ,சீர் மரபினர், முதுகலை பாலிடெக்னிக் போன்ற படிப்பு பயிலும் முன்றாண்டு இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி கல்வியில் உதவி தொகை 2025-26 கல்வி ஆண்டில் கல்லூரி மூலம் வழங்கப்படுகிறது www.://umis.tn.gov.in விண்ணப்பிக்க கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்
News December 11, 2025
புதுகை: கரை ஒதுங்கிய மீனவர் உடல்!

மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணி சேவியர் (45), பாஸ்கர் (44). இவர்கள் நேற்று முன்தினம் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு திடீரென பழுதான நிலையில் சேவியர் நிலைதடுமாறி கடலில் விழுந்து மூழ்கினார். இதையடுத்து போலீசார் அவரது உடலை தேடிய நிலையில் புதுக்குடி கடற்கரையோரம் மிதந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.


