News August 19, 2024

புதுகை அருகே விபத்து – இருவர் படுகாயம்

image

ஆலம்பட்டியை சேர்ந்தவர் சிவந்தி (29). இவரது மகன் ஸ்ரீதரன் (4). இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தந்தை, மகன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News January 24, 2026

புதுக்கோட்டை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<> upihelp.npci.org.in என்ற <<>>இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

திருமயம் அருகே உள்ள வெங்களூர் சாலையில் நேற்று பைக்கில் பன்னீர்செல்வம் (63), சாந்தி (55) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

புதுக்கோட்டையில் நாளை தொடங்குகிறது!

image

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் ஜன.28-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு அபிஷேகமும், மாலை 4 மணிக்கு கடஸ்தாபனமும், மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!