News October 20, 2025
புதுகை அருகே மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அடுத்த வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முனியன் (67). இவர் அவரது வீட்டில் கிரைண்டர் ஸ்விட்சை ஆன் செய்தபோது, துரதிஷ்டவசமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் அறந்தாங்கி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் அய்யனார் (40) அளித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
தந்தை பெரியார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து வரும் 18.12.25க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
News December 10, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 9, 2025
புதுக்கோட்டை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.


