News May 7, 2025
புதிய சாலைக்கு ஆட்சேபனை : 30 நாட்களுக்குள் மனு அளிக்க அழைப்பு

மதுரை விரகனூர் முதல் சக்குடி வரை சுமார் 8.4 கிலோ மீட்டருக்கு வைகை ஆற்றின் கரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் எடுக்கும் பணி துவங்கி உள்ளது,நிலம் எடுப்பு குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மே 30ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் எடுப்பு அலுவலகம் அலுவலகத்தை அணுகி கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு
Similar News
News November 17, 2025
மதுரை: டூவீலரில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

திருமங்கலம் அருகே உச்சப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் அவரது மனைவி செல்வி(41). இவர்கள் இருவரும் பைக்கில் கப்பலூர் காமராஜர் கல்லூரி அருகே நேற்று சென்ற போது, பின்னால் அமர்ந்திருந்த செல்வி திடீரென தவறி
விழுந்தார். அடிபட்ட அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
மதுரையில் இன்று, நாளை இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை, மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழவந்தான் பகுதியிலும் நாளை மேலூர், கொட்டம்பட்டி, பேரையூர், சின்னகட்டளை, எழுமலை, உசிலம்பட்டி, தும்மைகுண்டு, திருவாதவூர், நாட்டார்மங்கலம், , நரசிங்கம்பட்டி, A.வள்ளலாளபட்டி,மேலவளவு, தனியாமங்கலம், வாடிப்பட்டி, நரசிங்கம்பட்டி மற்றும் இதன் சுற்றுபகுதிகளில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.
News November 16, 2025
மதுரை: டிகிரி போதும்; உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் உள்ள Royal Enfield நிறுவனத்தில் Sales Executive பணியிடங்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-35 வயது வரை உள்ள டிகிரி முடித்தவர்கள் <


