News January 10, 2025

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளாகக் முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எடுத்து பழமை கழித்தல் புதியன புகுத்துதல் போன்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆகையால் நமது முன்னோர்களின் வழிகாட்டுதல்படி மக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல், இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

பயிர் காப்பீடு திட்டம்-ஆட்சியர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா -2) மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.11) தெரிவித்துள்ளார். மேலும், தேவையான ஆவணங்களை பயன்படுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் 88,630 பயனாளிகள் பயன்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் நலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 88,630 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ.11) அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!