News August 5, 2024
பிளஸ் – 1 மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 1,283 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 188 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 25, 2026
தேனி: மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் பலி

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (55). இவர் ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள மரக்கிளைகளை அறுக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முனியாண்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (ஜன.24) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு.
News January 25, 2026
தேனி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 25, 2026
தேனி: இளைஞர்கள் மீது தாக்குதல்

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (26). இவரது நண்பரான விருமாண்டி (28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன் தினம் அபினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் நவீன்குமார் மற்றும் விருமாண்டியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கூடலூர் தெற்கு போலீசார் அபினேஷை நேற்று கைது செய்தனர்.


