News March 27, 2024

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர்

image

வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், மகன் அஜித்குமார்(25). பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். சான்றிதழ் பெறுவதற்காக, 2023 அக்டோபரில் மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, இவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News January 24, 2026

சேலம்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>Sanchar Saathi<<>> என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

சேலம் அருகே கையும், களவுமாக சிக்கிய வாலிபர்!

image

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோரிமேடுவை அடுத்த ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்த ஹரி (27) என்பவர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்து சென்றதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!