News March 30, 2025
பிரபல் ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல ரவுடி அசோக் (28) மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகளவில் கஞ்சா விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஆப்பூா் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று (மார்.29) கைது செய்யச் சென்றனா். அப்போது அவர் அங்கிருந்த காவலா்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோது. போலீசார் அவரை காலில் சுட்டுக் பிடித்தனர்.
Similar News
News July 9, 2025
தார்ப்பாய் இல்லாமல் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சவுடு மண் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் மண் பரவி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார்ப்பாய் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News July 9, 2025
திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வரும் நேரம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. அதன்படி, ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை (ஜூலை 10, 2025) அதிகாலை 2:30 மணிக்குத் தொடங்கி, ஜூலை 11, 2025 அதிகாலை 3:15 மணி வரை பக்தர்கள் வலம் வர உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் கிரிவலம் வந்து இறைவனின் அருளைப் பெறலாம். ஷேர் பண்ணுங்க மக்களே!
News July 9, 2025
காவல் உதவி செயலின் வசதி மற்றும் முக்கியத்துவம்

செங்கல்பட்டு காவல்துறை மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம், அருகிலுள்ள காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ஒரு அவசர SOS பொத்தான் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.