News August 18, 2025

பாவூர்சத்திரம்: அழகு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகு முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் தினசரி காலை மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை யொட்டி இன்று அதிகாலையில் உலக அமைதி வேண்டி கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News December 5, 2025

தென்காசி: ரவுடியை பிடிக்க சென்று சிக்கிய போலீசார்

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகனை பிடிக்க நேற்று (டிச.4) இரவு சென்ற போலீசார் மலையில் ஏறிய போது, மேலே செல்ல முடியாமல் நடுப்பகுதியில் 5 போலீசார் சிக்கி தவித்தனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு போலீசாக மீட்கப்பட்டனர். இதனை பயன்படுத்திய பாலமுருகன் அப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

News December 5, 2025

தென்காசி: 10th போதும்.. அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News December 5, 2025

தென்காசி: மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி

image

கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்த சுடலை மகன் சர்வேஷ் (3). நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக அங்கிருந்த மின்மோட்டார் ரூமுக்கு சென்ற மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையம் போலீஸார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!