News November 17, 2025
பாளை அருகே இரு தரப்பினர் மோதல்

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக நண்பர்களுடன் ஆட்டோவில் அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டே கூச்சலிட்டபடி சென்றனர். இதனை மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் தட்டி கேட்டனர்.அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 4 மாணவர்கள் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
நெல்லை: லட்சக் கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்

நெல்லை மாவட்டம் (5 தொகுதிகள்) – நேற்றைய நிலவரப்படி பழைய /போலி / இறந்த பெயர்கள் நீக்கம்:
நெல்லை: 42,406 (13.87%)
அம்பை: 43,832 (16.83%)
பாளை: 36,559 (13.07%)
நாங்குநேரி: 55,966 (18.75%)
ராதாபுரம்: 44,011 (16.08%)
மொத்தம் நீக்கம்: 2,22,774 வாக்காளர்கள் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
நெல்லை: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

நெல்லை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
நெல்லை: மாடு குறுக்கே வந்ததால் தொழிலாளி பலி!

தச்சநல்லூரை சேர்ந்தவர் கணேசன் (55). கார் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் பணி முடிந்து மணிமூர்த்தீஸ்வரம் வழியாக பைக்கில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். மாநகரப் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


