News May 2, 2024

பாகிஸ்தானில் சேவையை நிறுத்தியது உபர்

image

கார் டாக்ஸி நிறுவனமான உபர், உலகளவில் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடுமையான போட்டி காரணமாக, பாகிஸ்தானில் தனது சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், அதன் துணை நிறுவனமான கரீம் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளது. 2019இல் கரீம் நிறுவனத்தை $310 கோடிக்கு உபர் வாங்கியது. அந்நிறுவனத்தை பாகிஸ்தானில் விரிவுபடுத்துவதில் உபர் முனைப்பு காட்டி வருகிறது.

Similar News

News December 17, 2025

தவெகவில் இணைந்தனர்.. கொங்குவில் அடுத்த விக்கெட்

image

செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, திமுக, அதிமுகவுக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தை தவெக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு உள்பட அமமுகவினர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும், மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 17, 2025

தமிழகம் கேட்டது… மத்திய அரசு தந்தது: CM

image

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு கேட்ட நிதியில் (₹24,670 கோடி), வெறும் 17%-ஐ (₹4,130 கோடி) மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு வென்றதுபோல, காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று குறிப்பிட்டார்.

News December 17, 2025

₹1 லட்சத்துக்கு ₹74 லட்சம் வட்டி.. கிட்னியை விற்ற விவசாயி!

image

பால் பண்ணை வைக்க மகாராஷ்டிர விவசாயி, தினமும் ₹10,000 வட்டி என்ற கண்டிஷனுடன் ₹1 லட்சம் கடன் வாங்குகிறார். ஆனால், தொழிலுக்காக வாங்கிய மாடுகள் இறந்துவிட, நிலம், டிராக்டரை விற்றும் கடன் தீரவில்லை. கம்போடியா சென்று கிட்னியை ₹8 லட்சத்துக்கு விற்க, கடன்காரர்கள் வட்டியுடன் ₹74 லட்சம் வேணும் என்கின்றனர். வாழ்க்கை இருண்டுவிட, நீதி வேணும், இல்லனா குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என அவர் கண்ணீருடன் நிற்கிறார்.

error: Content is protected !!