News March 23, 2024
பழனி: 20 டன் வாழைப்பழம்

பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை வாங்குகின்றனர். ஆடலூர், பன்றி மலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலிருந்து 20 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் மலை வாழைப்பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பழம் 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News November 18, 2025
பழனி: முன் விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை

பழனி அடுத்த கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே சின்னதம்பி (எ) தோமையார் என்பவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News November 18, 2025
பழனி: முன் விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை

பழனி அடுத்த கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே சின்னதம்பி (எ) தோமையார் என்பவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News November 18, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.


