News October 15, 2024

பழனியில் 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த ராஜேஷ் என்ற வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர் எங்கிருந்து ரேஷன் அரிசி வாங்குகிறார் என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 10, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

திண்டுக்கல்லில் தொழில் முன்னோடிகள் திட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைய https://www.msmetamilnadu.tn.gov.in/aabcs என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையத்தை 8925533943 தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in (அ) www.Invelaivaaippu.gov.in இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

error: Content is protected !!