News August 5, 2024
பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என பழங்குடியின நலத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நவீன வசதிகளுடன் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.இந்த இலவச பயிற்சி வகுப்பு வரும் ஆக.10ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் நடைபெறும்.
Similar News
News January 15, 2026
குமரியில் காலை முதலே படகு சேவைகள் தொடக்கம்

பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலையில் நேற்று (ஜன.14) மகர விளக்கு தெரிந்ததை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் இன்று காலை 6 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும், மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து பட போக்குவரத்து நடைபெறும். இன்று முதல் மூன்று நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
குமரி: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை

ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (58). தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நேற்று (ஜன.14) போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
குமரி: NO EXAM… போஸ்ட் ஆபீஸில் வேலை ரெடி..!

குமரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <


