News October 17, 2024
பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை ஓரளவு மழை சீரானதால், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 8, 2025
ECRல் மறைந்திருக்கும் ஆலம்பரைக்கோட்டை

கிழக்கு கடற்கரையோரம் காலனி காலம் வரை பல புகழ் பெற்ற கோட்டைகள் இருந்தன. அதில் ஒன்று தான் செங்கல்பட்டு செய்யூர் ஆலம்பரைக்கோட்டை. நவாப், பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் நிர்வகித்த இந்த கோட்டை அப்போது முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது. இந்தக் கோட்டையின் நடுவில் இஸ்லாமியத் துறவி ஒருவரின் கல்லறையும் உள்ளது. முன்னொருகாலத்தில் முக்கிய வணிக மையமாக பரபரப்போடு இருந்த இந்த கோட்டை இன்று அமைதியாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

தமிழக அரசு “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தங்கள் சுயவிவரங்களை வெளியிடாமல் தெரிவிக்கலாம். மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் குறித்து புகார் அளிக்க 10581 என்ற அமலாக்கப்பிரிவு உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News July 8, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!