News October 15, 2024
பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று விருதுநகரில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News July 10, 2025
உயர் கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியியல் சேர்ப்பது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் வெள்ளி (11.07.25) அன்று நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
விருதுநகர்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைத்தும், பட்டாசு ஆலைகளை 10 நாள்களுக்குள் ஆய்வு செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
News July 9, 2025
எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் அரசு பஸ் செல்லத் தடை

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் வரும் 10ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.