News February 27, 2025
பயிர் காப்பீட்டில் ரூ.5,148 கோடி நிவாரணம்: பன்னீர்செல்வம்

சேலத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,148 கோடி நிவாரண உதவித்தொகையாக எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Similar News
News February 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 27 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News February 27, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (16843) வரும் மார்ச் 01- ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு இருகூர் வரை மட்டுமே இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் இருகூர் முதல் பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News February 27, 2025
“விதிகளை மீறி முந்திச் செல்ல வேண்டாம்” போலீசார் அறிவுறை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 27) விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம். சாலை விதிகளை மதிப்பீர், என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.