News June 19, 2024

பந்தலூரில் தொடங்கும் ஜமாபந்தி கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பகுதிகளில் ஜூன் 19,20,21 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைப்பெறும் நிலையில், இன்று அதன் முதல் நாள் கூட்டம் பந்தலூரில் தொடங்குகிறது. இதற்கு நீலகிரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகிக்கிறார். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

நீலகிரி: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

நீலகிரி மக்களே உங்களுக்கு தான்.. SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

News January 20, 2026

நீலகிரியில் குடும்ப பிரச்சனையால் விபரீதம்!

image

நீலகிரி மாவட்டம், குந்தலாடி பூதானகுன்னு பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தவர் யோகராஜ் (38). இவர் நேற்று இரவு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பந்தலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!