News October 9, 2024

பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.49

image

வெங்காயம், தக்காளி விலை கடும் உயர்வைத் தொடர்ந்து, பண்ணை பசுமை கடைகளில் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு விற்பனையைத் தொடங்கியுள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.49க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News November 8, 2025

6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News November 8, 2025

சென்னை: விஜய்க்கு முதல்வர் மறைமுக பதிலடி!

image

திமுக – தவெக இடையே தான் வரும் தேர்தலில் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது ஆண்டு விழாவில், ‘திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அதிலும், சில அறிவிலிகள் திமுக போல் வெற்றி பெற்றுவிடுவோம் என பகல் கனவு காண்கின்றனர். திமுக போல் வெற்றி பெற அறிவும், உழைப்பும் தேவை’ என பேசினார்.

News November 8, 2025

சென்னை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை மக்களே! உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!