News October 19, 2025
பசுமை தீபாவளி கொண்டாட ஆட்சியர் அறிவிப்பு

அனைத்து பகுதிகளிலும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறைந்த ஒலி கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளையும் அரசு வகுத்துள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
ஒரு வாரம் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. இதில் திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
News December 15, 2025
தேனி: சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு

கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது 3.5 வயது மகன் சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, முன்புறமாக குப்புற விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று(டிச.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
News December 15, 2025
தேனி: வீட்டில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராணி (69). இவர் நேற்று முன்தினம் பாத்ரூம் சென்ற பொழுது அங்கு வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று (டிச.14) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


