News May 13, 2024
நெல்லை கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மே 13) தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக 3,69,545 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
நெல்லை: ரேஷன் கார்டு இருக்கா.? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று புதிய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, கடைகளின் செயல்பாடுகள், தரம் குறித்த புகார் போன்ற மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News December 12, 2025
நெல்லை: மகளை கர்பமாக்கிய தந்தை

நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன், மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 27 வயது திருமணமாகாத பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவரது 65 வயது தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 12, 2025
நெல்லை: நடந்து சென்ற ஊழியருக்கு ஏற்பட்ட சோகம்

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் உலகநாதன் (61). மரக்கடையில் பணி செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாலையோரம் நடந்து சென்று அந்த வழியாக வந்த பைக் உலகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த அவர் நெல்லை G.H-ல் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 11) காலை உயிரிழந்தார். இது குறித்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


