News June 18, 2024
நெல்லை: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 169 அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் 290 நடத்துநர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு தொடங்கியுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சிகள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Similar News
News January 20, 2026
நெல்லை முக்கிய ரயில் – தற்காலிக பாதை மாற்றம்

நெல்லை வழியாக மதுரை கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்(எண்:16321) 22ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மதுரை வழியாக செல்லாமல் மாற்றுப் பாதையான மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் 22ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாற்று பாதையில் இயக்கப்படும். கூடல் நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *SHARE
News January 20, 2026
நெல்லை: மத போதகர் அறையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(38). இவர் மது பழக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடைக்கலப்பட்டினத்தில் உள்ள மத போதகரை சந்தித்த அவர் போதகர் அறையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
நெல்லை: மத போதகர் அறையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(38). இவர் மது பழக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடைக்கலப்பட்டினத்தில் உள்ள மத போதகரை சந்தித்த அவர் போதகர் அறையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


